தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 12-ஆவது போட்டி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர். - படம்: ஏபி

Updated On :19 ஜூன் 2026, 12:30 pm IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 12-ஆவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

லீட்ஸ் திடலில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 153/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டாஃபனி டெய்லர் 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

ஸ்காட்லாந்து சார்பில் கேத்தரின் ஃப்ரேசர் 2விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை டார்சி கார்ட்டர் 59 ரன்கள் எடுத்தார். மே.இ.தீ. அணியின் சார்பில் ஹேலி மேத்யூஸ், ஆலியா அல்லீன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்காட்லாந்து அணி ஒரு வெற்றியுடன் மூன்றாமிடத்தில் இருக்க, இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

ICC Women's T20 World Cup 2026 West Indies Women won by 7 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.