எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது,
"இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள 'சூப்பர் எல் நினோ' நிகழ்வினால் நாடு முழுவதும். குறிப்பாக, குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள 'மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டுத் ' (District Agricultural Contingency Plan) மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்களூரா இரக மாம்பழத்திற்குக் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை இருந்தது. எனவே, பெங்களூரா இரக மாம்பழத்திற்கு மத்திய அரசின் சந்தை இடையீட்டுத் திட்டத்தில், விலை வித்தியாசத் தொகை வழங்க மத்திய அரசுக்கு உரிய கருத்துருவினை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது.
இதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்படுவதற்குள் பெங்களூரா இரகத்தின் அறுவடை முடிவுற்ற நிலையில் 6 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும், திட்ட நடைமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருப்பதால் இனி வருங்காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை விரைவாக எதிர்கொள்ள. வேளாண்மை-உழவர் நலத் துறை முற்றிலும் தயாராக உள்ளது" என்றார்.
Summary
TN Agriculture budget 2026: 12 districts affected by El Nino
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் பட்ஜெட் நிறைவு! 130 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் வினோத்!
வேளாண் பட்ஜெட் 2026: சென்னை, கோவை, திருச்சியில் தளிர்க்கீரைகள் திட்டம்!
குறைந்த நீரில் அதிக மகசூல்! துளித் துளித் தண்ணீர் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


