
சிடி ஸ்கேனுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து சண்டீகர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், கரோனா பரிசோதனையும், நுரையீரல் தாக்கத்தை கண்டறிய சிடி ஸ்கேன் பரிசோதனையும் அவசியமாகி உள்ளது.
இந்நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சில மையங்கள் தவறாக பயன்படுத்தி அதிக கட்டணங்களை வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது.
இதையடுத்து சண்டீகர் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில், சிடி ஸ்கேனுக்கு கட்டணமாக ரூ. 1800-ஐ நிர்ணயம் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.