தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குமுன் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், இரண்டாவது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா நாத் ஐஏஎஸ், மூன்றாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், நான்காவதாக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.