நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உசிலம்பட்டியில் களைகட்டியது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உசிலம்பட்டி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, டி எல் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, ஆர் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டி இ எல் சி நடுநிலைப்பள்ளி, கருக்கட்டான்பட்டி அரசுப்பள்ளியில், பொதுமக்கள் காலை 7 மணி முதல் வாக்களித்து வருகின்றனர்.
இதேபோல் எழுமலை பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர் . வேட்பாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரியை கையில் வைத்துக்கொண்டு தங்களது சின்னம் இருக்கும் வரிசையை காண்பித்து அதில் வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...