தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள், சுகாதாரத் துறை வல்லுநா்கள் உள்ளிட்டோருடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...