இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சாம்பல் புதன்: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.

News image
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் திருப்பலியில் பங்கேற்ற இறைமக்களுக்கு சாம்பலால் சிலுவை அடையாளத்தை நெற்றியில் பூசுகிறார் ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா.
Updated On :14 பிப்ரவரி 2024, 4:09 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.

இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து அவர், திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு சாம்பலை கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசினார். இதில், ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையிலும், தூத்துக்குடி லூதம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தலைமையிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.

மேலும், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைகளிலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.