ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

”ராகுல் காந்தியை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” - சோனியா காந்தி உருக்கம்!

ரேபரேலியில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, தனக்கு அளித்த அதே அன்பையும் பாசத்தையும் ராகுல் காந்திக்கும் வழங்குமாறு ரேபரேலி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :17 மே 2024, 12:56 pm

DIN

ரேபரேலியில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, தனக்கு அளித்த அதே அன்பையும் பாசத்தையும் ராகுல் காந்திக்கும் வழங்குமாறு ரேபரேலி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ”நான் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதியது போல, அவருக்கும் அதே அன்பையும் பாசத்தையும் வழங்குங்கள். ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்" என்று கூறினார்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். சோனியா காந்தி, முன்பு இருபது ஆண்டுகளாக இந்த இடத்தை தக்க வைத்திருந்தார்.

”தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து என்னவென்றால், ரேபரேலி மக்கள் தனக்கு 20 ஆண்டுகள் எம்பி-யாக பணியாற்ற வாய்ப்பு அளித்தது” என்று சோனியா கூறினார்.

ரேபரேலி மக்களை தனது குடும்ப உறுப்பினர்கள் என்றும், இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியினையும் மரியாதையினையும் தெரிவிப்பதாக சோனியா கூறினார்.

ரேபரேலியும் அமேதியும் தனது குடும்பம் என்று கூறிய சோனியா காந்தி, அன்னை கங்கையைப் போலவே புனிதமான இந்த உறவு, ரேபரேலி விவசாயிகளின் இயக்கத்துடன் தொடங்கியது, அது இன்றும் தொடர்கிறது ".

"இந்திராகாந்திக்கும் ரேபரேலிக்கும் ஓர் சிறப்பான உறவு இருந்ததாகவும் ரேபரேலி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாகவும், இந்திரா ஜி மற்றும் ரேபரேலி மக்கள் தனக்கு வழங்கிய அதே போதனைகளை, ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் தான் கொடுத்துள்ளதாகவும் சோனியா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.