
தில்லியில் வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் நிலவும் கடுமையான வெப்பஅலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும் 11.05.2024 முதல் 30.06.2024 வரை கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, அதிக வெப்பநிலை நிலவுவதை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மொத்தம் 50 நாள்கள் விடுமுறை அறிவிப்பை தில்லி அரசு அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு தில்லியில் அதிகப்படியான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.