ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 உதவித் தொகை: ராகுல்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

News image
Updated On :27 மே 2024, 6:29 pm IST

பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பிகாரில் உள்ள பக்தியார்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ”நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு இருப்பதால், நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், 2022ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசால் அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.8500 வரவு வைக்கப்படும்”

காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியின் கீழ் மக்களவைத் தேர்தலை சந்தித்து வருகின்றன.

6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.