
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் பகிர்ந்த பதிவினைப் பாராட்டியும், ராகுல் காந்தி குறித்த விடியோ ஒன்றினைப் பாராட்டியும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மற்றும் தில்லி முதலல்வர் அரவிந்த் கேஜரிவால் அவர்களின் எக்ஸ் தளப் பதிவுகளை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் உசேன் பகிர்ந்திருந்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கண்ட இரு நிகழ்வினைத் தாம், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் என்ற கருத்து நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "நம்முடன் பகைமை கொண்டவர்கள், ஒரு சிலரை மட்டும் ஏன் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.