பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 667 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :29 மே 2024, 6:35 pm IST

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை தொடக்கத்தில் எழுச்சி பெற்றாலும் இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667 புள்ளிகளை இழந்தது.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (மே.28) சென்செக்ஸ் 75,170.45-ல் முடிவடைந்தது. இன்று காலை 74,826.94-ல் துவங்கிய சென்செக்ஸ் பங்குகளின் விற்பனையால் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனாலும், வர்த்தக இறுதியில் 667.55 புள்ளிகளை இழந்து 74,502.90-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் ஐடிசி, சன் பார்மா, பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, நேற்றைய வா்த்தக இறுதியில் 22,888.15-இல் முடிவடைந்தது. இன்றைய வா்த்தகத்தின்போது 22,762.75-ல் துவங்கியது. 80 புள்ளிகள் வரை உயர்வைக் கண்ட நிஃப்டி ஏற்ற, இறக்கங்களுடன் தள்ளாடி 22,825.50 வரை உச்சம் கண்டது.

ஆனால், வர்த்தக முடிவில் 183.45 புள்ளிகள் இழந்து 22,704.70-ல் நிறைவடைந்தது. நிஃப்டியில் ஹிண்டல்கோ, அதானி போர்ட்ஸ், ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.

கடந்த வாரம் பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத உச்சத்திற்கு சென்ற நிலையில், இரண்டு நாள்களாக இறக்க முகமாக உள்ளது. இருப்பினும், அடுத்தடுத்து வரும் நாள்களில் சந்தை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் முதலீட்டாளர்கள்!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை தொடக்கத்தில் எழுச்சி பெற்றாலும் இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667 புள்ளிகளை இழந்தது.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (மே.28) சென்செக்ஸ் 75,170.45-ல் முடிவடைந்தது. இன்று காலை 74,826.94-ல் துவங்கிய சென்செக்ஸ் பங்குகளின் விற்பனையால் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனாலும், வர்த்தக இறுதியில் 667.55 புள்ளிகளை இழந்து 74,502.90-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் ஐடிசி, சன் பார்மா, பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, நேற்றைய வா்த்தக இறுதியில் 22,888.15-இல் முடிவடைந்தது. இன்றைய வா்த்தகத்தின்போது 22,762.75-ல் துவங்கியது. 80 புள்ளிகள் வரை உயர்வைக் கண்ட நிஃப்டி ஏற்ற, இறக்கங்களுடன் தள்ளாடி 22,825.50 வரை உச்சம் கண்டது.

ஆனால், வர்த்தக முடிவில் 183.45 புள்ளிகள் இழந்து 22,704.70-ல் நிறைவடைந்தது. நிஃப்டியில் ஹிண்டல்கோ, அதானி போர்ட்ஸ், ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தாலும் ஐசிஐசிஐ மற்றும் எஹ்டிஎஃப்சி வங்கிகள், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.

கடந்த வாரம் பங்குச்சந்தை மதிப்பு வரலாறு காணாத உச்சத்திற்கு சென்ற நிலையில், இரண்டு நாள்களாக இறக்க முகமாக உள்ளது. இருப்பினும், அடுத்தடுத்து வரும் நாள்களில் சந்தை மீண்டு விடும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் முதலீட்டாளர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.