இந்திய அரசியலைப் பொறுத்தவரை வட இந்திய அரசியல்வாதிகள், தென்னிந்திய அரசியல்வாதிகளை விட அரசியல் நாகரீகம் மிக்கவர்கள் என்று பல சமயங்களில் மீடியாக்களால் புகழப்படுவார்கள். காரணம் பாராளுமன்றத்தின் உள்ளேயோ அல்லது சட்டமன்றத்தின் உள்ளேயே அவர்களுக்குள் அரசியல் ரீதியாக ஆயிரம் தர்க்கங்களும், காரசாரமான விவாதங்களும் நடக்கும். கட்டிப் புரண்டு மல்லுக்கட்டாத குறையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் நிறைந்த சபை, பொது வெளி, விழாக்களில் ஒன்றாகப் பங்கேற்கும் சந்தர்பங்கள் அமையும் போதெல்லாம் குடும்ப நண்பர்களைப் போல நலம் விசாரிக்கத் தயங்க மாட்டார்கள். குறைந்த பட்சம் எப்பேர்ப்பட்ட அரசியல் எதிரிகள் என்றாலும் ஒரு புன்னகையாவது பரிமாறிக் கொள்வார்கள் என்று தான் இதுவரை நற்பெயர் எடுத்திருந்தார்கள்.
ஆனால், இன்று காலை பாராளுமன்றத்தின் 4 ஆம் எண் நுழைவாயில் வழியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியேறிக் கொண்டிருக்கையில் சொல்லி வைத்தாற் போல பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா உள்ளே எண்ட்ரி ஆனார். இருவரும் வெகு நெருக்கமாக, எதிரும், புதிருமாய் வாசலைக் கடக்க நேர்கையில் இருவரது முகத்திலும் புன்னகை இருந்ததென்னவோ வாஸ்தவமே, ஆனால் அது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டது அல்ல. அங்கே குழுமியிருந்த அவரவர் கட்சியினருக்கானது.
இருவருமே மிக நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அரசியல் நாகரீகத்தைப் பற்றிச் சொல்லித்தர தேவையில்லை. ஆனால், இந்தியாவின் பிரதான இரு தேசியக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் இப்படி பொதுமக்கள் உலவும் இடங்களில் குறைந்த பட்ச அரசியல் நாகரீகத்தைக் கூட கிடப்பில் போட்டு ஒரு ‘ஹாய்’ கூட சொல்லிக் கொள்ளாது, முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றது ரசிக்கும்படியாக இல்லை.
இப்படி இருக்கும் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு இனி அதிமுக, திமுக போன்ற தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமிருப்பதாகத் தெரியவில்லை.
Related Article
தென்னிந்தியாவை தனி நாடாக்கக் கோரும் தெலுங்கு தேச எம்.பி!
அம்பானி குடும்ப வாரிசு ஆகாஷ் அம்பானியின் மணமகளாகக் கிசுகிசுக்கப்படும் ஸ்லோகா மேத்தா யார்?
இன்னும் கொஞ்ச நாள் லீவு வேணும் மக்களே! சிகிச்சை விஷயத்தில் கோவா முதல்வரின் வெளிப்படையான அணுகுமுறை!
சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



