பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அம்பானி குடும்ப வாரிசு ஆகாஷ் அம்பானியின் மணமகளாகக் கிசுகிசுக்கப்படும் ஸ்லோகா மேத்தா யார்?

மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து

News image
Updated On :6 மார்ச் 2018, 10:43 am IST

அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். வரும் டிசம்பரில் அம்பானி மாளிகையில் திருமண மேளச்சத்தம் ஒலிக்கத் தொடங்கலாம். முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆகாஷ் அம்பானியின் வருங்கால மனைவியாக கிசுகிசுக்கப்படும்... (அட ஆமாங்க இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லையே! அப்போ கிசுகிசுக்கப்படும் என்று தான் சொல்லியாக வேண்டும்.) இளம்பெண் யார் தெரியுமா? அவரது பெயர் ஸ்லோகா மேத்தா. ஸ்லோகா மேத்தா வைர வியாபாரி ரஸ்ஸெல் மேத்தாவின் இளைய மகள். 

தெற்கு மும்பையில் வசித்து வரும் இந்த இரு  பிரம்மாண்டமான குடும்பங்களும் ஒருவருக்கொருவர் புதியவர்கள் இல்லை. முன்பே இரு குடும்பங்களுக்கும் நல்ல அறிமுகமுண்டு. இந்த திருமண வதந்தியில் அதிகமாகக் கிசுகிசுக்கப் படும் மற்றொரு வதந்தி என்னவென்றால் ஆகாஷ் அம்பானியின் வரனாகக் கருதப்படும் ஸ்லோகாவின் தாயார் மோனா மேத்தா தற்போது வங்கிக் கடன் மோசடியில் சிக்கி நாட்டை விட்டு ஓடிப்போனவராகக் கருதப்படும் நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் என்பதே! 

மணப்பெண் ஸ்லோகா தற்போது தனது தந்தையின் தலைமையிலான ‘ரோஸி புளூ டயமண்ட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனராக இயங்கி வருகிறார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆகாஷுடன் இணைந்து படித்து முடித்தவர். அதாவது பள்ளிக்காலத்திலிருந்தே இருவருக்கும் நல்ல பரிச்சயமுண்டு.

பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின் பிரின்ஸ்டனில் மானுடவியல் இளங்கலைப் படிப்பை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்தை லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நிறைவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தனது நண்பர்களுடன் இணைந்து ‘கனெக்ட்ஃபார்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றையும் ஸ்தாபித்து ஸ்லோகா நடத்தி வருகிறார்.

இப்போது வரையிலும் இரு குடும்பங்களும் இந்தத் திருமண விஷயத்தை வதந்தி என்று மறுத்து வந்தாலும். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 24 அன்று மும்பையில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் காற்றில் ஒரு சேதி உலவுகிறது. மும்பையின் இரு மெகா பணக்காரக் குடும்பத்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஸ்விட்சர்லாந்தில் வைத்து நடத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

Related Article

இன்னும் கொஞ்ச நாள் லீவு வேணும் மக்களே! சிகிச்சை விஷயத்தில் கோவா முதல்வரின் வெளிப்படையான அணுகுமுறை!

ஃபிடல் காஸ்ட்ரோ, பிரபாகரன் குறித்துக் கருத்துக் கூறி ஈழத்தமிழர்களைக் கொந்தளிக்கச் செய்த பிரபல மனநல மருத்துவர்!

சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்!

எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையின் போது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை எவை?

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் இன்றைய நிலை?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.