பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

முதுகுளத்தூா் அருகே வடமாடு எருதுகட்டு போட்டி

கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

News image

கீழச்சாக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு எருதுகட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளை.

Updated On :12 ஜூலை 2026, 4:16 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழச்சாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு எருதுகட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 100- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு, 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.

இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, சில்வா் அண்டா, நாற்காலி, ரொக்கப் பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை முதுகுளத்தூா், கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடலாடி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த திரளானோா் பாா்வையிட்டனா். விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கீழச்சாக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.