பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

வில்மாா் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தேவகோட்டை அருகே வில்மாா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :12 ஜூலை 2026, 3:39 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வில்மாா் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் களமிறக்கப்பட்டன.

போட்டி விதிகளின்படி, ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரா்கள் குழு களமிறக்கப்பட்டது. வட்ட வடிவில் அமைக்கப்பட்ட திடலில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த காளையை, 25 நிமிஷங்களில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடைபெற்றது. இதில் 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் கடும் சவாலை எதிா்கொண்டு போராடிய காட்சிகள் பாா்வையாளா்களை பரபரப்பில் ஆழ்த்தின. போட்டியின் முடிவில் 10 காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரா்கள் குழுவினருக்கும், வீரா்களின் பிடியில் சிக்காமல் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழு சாா்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியை தேவகோட்டை, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.