நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்... கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்!

தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன

News image
Updated On :13 மார்ச் 2018, 5:18 pm IST

மகாராஷ்டிராவின் யவத்மல் பகுதியில் இருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஒரிஜினல் ஆதார் கார்டுகள் மீட்கப்பட்டன. கிணற்றுக்குள் இருந்து கோணிப்பைகளில் கட்டப்பட்டு வீசப்பட்ட ஆதார் கார்டுகளை மீட்ட உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்றதும், இச்சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்களை விசாரிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களில் சிலர், ஊரில் நிலவும் கடுமையாக தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

யத்வல் பகுதியின் சிண்டே நகர், சாய்மந்திரில் இருக்கும் கிணற்றைத் தூர்வார முயன்றபோது கிணற்றுக்குள்ளிருந்த பாறைக்கு அடியில் இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு மூட்டை சிக்கியிருக்கிறது. மூட்டைக்குள்ளிருந்த ஆதார் கார்டுகள், பல நாட்களாக நீரில் ஊறியிருந்த காரணத்தால் சிதிலமடைந்திருந்த போதிலும், அதிலிருக்கும் தகவல்கள் அழியாமல் வாசிக்க முடியும் அளவுக்கு இருந்ததால் அந்த ஆதார் கார்டுகள் அனைத்தும் புறநகர்ப் பகுதியில் இருக்கும் லோஹர கிராமத்தைச் சேர்ந்தவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், மீட்கப்பட்டுள்ள அந்த ஒரிஜினல் ஆதார் கார்டுகள் அனைத்தும் வருவாய்த்துறை ஆணையர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவையா? அல்லது இந்திய தபால் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவையா? என்பது குறித்து விசாரிக்க ஆணையிட்டுள்ளார். யாராக இருந்தாலும் சரி கடமையை மீறிய குற்றவாளிகள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள ஆதார் கார்டுகளுக்கு உரிய நபர்கள் யாரெனக் கண்டறிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யவத்மல் தபால்துறை தலைமை அஞ்சல் அதிகாரியான ஆனந்த சர்க்கார் தெரிவித்துள்ளார்.

Related Article

ராகுல் காந்தியும், அமித் ஷாவும் நேருக்கு நேர் பார்த்தப்போ ஒரு ‘ஹாய்’ கூட சொல்லிக்கலை! இதான் அரசியல் நாகரீகம்!

தென்னிந்தியாவை தனி நாடாக்கக் கோரும் தெலுங்கு தேச எம்.பி!

அம்பானி குடும்ப வாரிசு ஆகாஷ் அம்பானியின் மணமகளாகக் கிசுகிசுக்கப்படும் ஸ்லோகா மேத்தா யார்?

இன்னும் கொஞ்ச நாள் லீவு வேணும் மக்களே! சிகிச்சை விஷயத்தில் கோவா முதல்வரின் வெளிப்படையான அணுகுமுறை!

ஃபிடல் காஸ்ட்ரோ, பிரபாகரன் குறித்துக் கருத்துக் கூறி ஈழத்தமிழர்களைக் கொந்தளிக்கச் செய்த பிரபல மனநல மருத்துவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.