நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!

தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள

News image
Updated On :15 அக்டோபர் 2018, 10:53 am IST

மத்திய இணை அமைச்சரும், பிரபல பத்திரிகையாளராக அறியப்பட்டவருமான M J அக்பர் மீது ‘மீடூ’ பாலியல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. தம் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு எதிர்வினையாக அக்பர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொள்ளவிருப்பதாகவும் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமது பெயருக்கும், மதிப்புக்கும் களங்கள் கற்பிக்கும் வகையில் இம்மாதிரியான புகார்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டு வருவதாக அக்பர் தெரிவித்துள்ளார்.

தி இந்து பத்திரிகை நிர்வாகி என். ராம், அமைச்சர் அக்பரின் எதிர்வினை குறித்துப் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில், ‘அமைச்சர் ராஜினாமா செய்யாதது நல்லது தான். ஏனென்றால், இப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கவோ, பாலியல் வழக்கு குறித்து விசாரித்து போதுமான தகவல்களைப் பெறவோ போதுமான வாய்ப்புகள் அதிகமும் கிடைக்கும். ஒருவேளை அவர் ராஜினாமா செய்து விட்டாரென்றால் 15 நாட்களில் மக்கள் இந்த விஷயத்தை மறந்து விடுவார்கள்.’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.