தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் மேற்கு பகுதியான கார்கில் நகரில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 1,200 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி கடந்த 2018}ஆம் ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு தொகுப்பிலும் பத்து அடுக்குகளில் சுமார் 300 வீடுகள் என நான்கு தொகுப்புகளாக வீடுகள் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள்: வீடுகளை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் முற்றிலுமாக நீர்நிலைப் பகுதி என்பது வருவாய்த் துறை ஆவணங்களின்படி கழிவெளி புறம்போக்கு எனப்படும் மழைநீர் தேங்கும் நீர்நிலை வகைப்பாட்டிற்கு உட்பட்டது என்றுதான் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.