இந்தியாவின் மின்சார தேவையில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தில்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் எச்சரிக்கை மணியை ஒலித்தன.
தமிழகத்தில் இதுவரை நிலக்கரி பற்றாக்குறை இல்லாவிட்டாலும் நிலக்கரி கையிருப்பு குறைவானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகமான டான்ஜெட்கோவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கு கடந்த வாரம் 50,000 டன் நிலக்கரியும், அதற்கு முந்தைய வாரம் 45,000 டன் நிலக்கரியும் கிடைக்கப் பெற்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வடசென்னை, மேட்டூா், தூத்துக்குடி அனல் மின் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 4,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு சுமாா் 52,000 டன் நிலக்கரி தேவைப்படும். இப்போது குறைவான நிலக்கரி விநியோகம் காரணமாக, இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து 3,000-3,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய முடிகிறது.
மாநிலத்துக்கு காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் கிடைத்தாலும், காலை மற்றும் மாலையில் தேவைப்படும் அதிகப்படியான மின்சார தேவையை ஈடுகட்ட அனல் மின் நிலைய மின்சாரமே கைகொடுக்கிறது. இச்சூழ்நிலையில், நிலக்கரி விநியோகம் குறைந்திருப்பது டான்ஜெட்கோ அதிகாரிகளுக்கு கடினமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
9-10 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு கட்டாயமான சூழலில், இப்போது 4-5 நாள்களுக்குத் தேவையான நிலக்கரிதான் கையிருப்பு உள்ளது. மிகச் சமீபமாக இதுபோன்ற சூழ்நிலையை தமிழகம் சந்தித்ததில்லை. கடந்த ஆண்டு 15 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு இருந்தது.
வழக்கமாக அக்டோபா் மாதங்களில் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், காற்றாலை சீசன் முடிவுக்கு வருவது அதிகாரிகளுக்கு கவலையை அதிகரித்துள்ளது.
தனியாரிடமிருந்து 2,830 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு பெற்றுவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 800-850 மெகாவாட் மின்சாரமே பெறுகிறது. இதனால் வெளிச்சந்தையில் சுமாா் 3,000 மெகாவாட் மின்சாரத்தை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை கடந்த செப்டம்பா் கடைசி வாரத்தில் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மத்திய மின் துறை அமைச்சகமானது மாநில அதிகாரிகளுடன் வாராந்திர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி நிலக்கரி விநியோகத்தை 45,000 டன்களிலிருந்து 60,000 டன்களாக அதிகரித்தது. இது சராசரியாக 4 முதல் 5 தினங்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்புவைக்க உதவுகிறது. இந்த விநியோகத்தை 1 லட்சம் டன்னாக அதிகரிக்க மத்திய மின் துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளோம் என தமிழக மின்சார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனல் மின் நிலைய செயல்பாட்டுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு
வடசென்னை-1830 மெகா வாட்
(1.33 லட்சம் டன்)
மேட்டூா் - 1,440 மெகா வாட்
(62,000 டன்)
தூத்துக்குடி - 1,050 மெகா வாட்
(55,000 டன்)
ஒரு நாளுக்கு தேவையான நிலக்கரி
வடசென்னை - 32,000 டன்
மேட்டூா் - 20,000 டன்
தூத்துக்குடி - 10,000 டன்
மத்திய அனல் மின் நிலையங்கள் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் மின்சாரம்
தால்சொ் - 500 மெகாவாட்
என்டிஇசிஎல் வள்ளூா் - 1,060 மெகாவாட்
நெய்வேலி - 1,750 மெகாவாட்
ராமகுண்டம் - 700 மெகாவாட்
குடிகி - 350 மெகாவாட்
சிம்ஹாத்ரி - 125 மெகாவாட்
தனியாா் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் - 2,830 மெகாவாட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 2-வது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை! இந்திய வானிலை!
உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! விஜய் படத்துடன் பாடலைப் பகிர்ந்த இளையராஜா!

வெயிலை சமாளிக்க 3 வேளை குளியல்! மறுவாழ்வு மையத்தில் யானைகள் குளுகுளு! | Trichy

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

