மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காது கேளாதோருடன் பேசுவது எப்படி? - சைகை மொழி நாள் இன்று!

ஆர்வத்துடன் பிற மொழிகளைக் கற்றுக்கொள்பவர்கள், நம் நாட்டில் 6 கோடிக்கும் அதிகமாக இருக்கும் காது கேளாதோரின் இந்திய சைகை மொழியை ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது?

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 10:30 am

DIN

இன்று (செப். 23) சர்வதேச சைகை மொழிகள் தினம்...

காது கேளாதோர் தங்களுக்குள் தொடர்புகொள்ளவும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளவும் உலகம் முழுவதும் சைகையால் ஆன மொழியொன்றைப் பயன்படுத்துகின்றனர், சின்னச் சின்ன மாற்றங்களுடன்.

ஒவ்வொரு நாட்டிலும் சில வேறுபாடுகள் இருக்கும், நம் நாடு முழுவதும் இந்திய சைகை மொழி (ஐஎஸ்எல்)தான் காதுகேளாதோருக்கு இடையிலான கருத்துப் பரிமாற்ற சாதனமாகப் பயன்படுகிறது. 

உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, இந்தியாவில் 6.3 கோடி காது கேளாதோர் உள்ளனர். இவ்வளவு பெரிய புள்ளிவிவரம் இருந்தபோதிலும், 120 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள்தொகையில் ஒருசிலர் மட்டுமே காது கேளாதோருடன் தொடர்புகொள்ளும் அறிவைப் பெற்றுள்ளனர். 

மக்கள் தங்களுடைய மொழி தவிர ஆங்கிலம் மற்றும் பிற மாநில மொழிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு மரியாதையும் கொடுக்கின்றனர். ஏன், வெளிநாட்டு மொழிகளைக்கூட பலரும் கற்றுக்கொள்ள விருப்பப்படுகின்றனர். ஆனால், நம் நாட்டில் நம்முடன் இருக்கும் காது கேளாத, வாய் பேச முடியாதோருடன் தொடர்புகொள்ளக் கூடிய இந்திய சைகை மொழியைக் கற்றுக்கொள்ள மக்கள் விரும்புவதில்லை.

இந்த சைகை மொழியே உலகின் முதல் மொழியாக, மூத்த மொழியாக இருந்ததை இன்று பலரும் மறந்துவிட்டனர். மனிதனிடையே தகவல் பரிமாற்றத்திற்கு முதலில் சைகை மொழிகளே பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னரே பேச்சு, எழுத்து வடிவங்கள் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது. 

முன்பெல்லாம் காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் தொலைபேசி வழி யாருடனும் தொடர்புகொள்ள இயலாது. ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று காது கேளாதோர், வாய்பேச முடியாதோர் செல்போனில் விடியோ அழைப்பு மூலமாக சைகை மொழியைக் கொண்டு தொலைவிலுள்ள  தங்கள் நண்பர்களுடன் பேசுகின்றனர்.

சாதாரண மொபைல் போனில் பேச முடியாத அவர்களுக்கு தற்போதைய ஆண்ட்ராய்டு போன்களும் பல்வேறு செயலிகளும் அவர்கள் எந்நேரமும் யாருடனும் தொடர்புகொள்ள ஒரு தகவல் பரிமாற்றத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

இந்நிலையில், தங்களுடைய தனிப்பட்ட அறிவுக்காக, பயன்பாட்டுக்காக மற்ற மொழிகளை கற்றுக்கொள்பவர்கள் நம் நாட்டில் 6 கோடிக்கும் அதிகமாக உள்ள காது கேளாதோருக்காக எளிய இந்திய சைகை மொழியை ஏன் கற்றுக்கொள்ள கூடாது? என்று கேள்வி எழுப்பும் காது கேளாதோர் அறக்கட்டளையின் நிறுவனர் ரம்யா மிர்லா, இந்திய சைகை மொழியை கற்றுக்கொள்ள EduSign Academy என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, 'தற்போது, சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் என 325 பேருக்கு மட்டுமே ​​இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) சான்றளித்துள்ளது. இந்திய சைகை மொழியை பல்வேறு நிலைகளில் கற்றுக்கொள்ள முடியும். இதில், A நிலை என்பது அடிப்படை தகவல்தொடர்பு, சில சொற்றொடர்கள் மற்றும் எழுத்துக்களைக் கற்றுக்கொள்வது.  B நிலை என்பது காது கேளாதோருடன் தொடர்புகொள்பவர்கள், அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கானது. C நிலை என்பது தொழில் ரீதியாக மொழிபெயர்க்கக்கூடிய மொழி பெயர்ப்பாளர்களுக்கானது. A நிலையில் பலர் இருந்தாலும் C நிலையில் அரிதாகவே இருக்கின்றனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் சைகை மொழியில் சில மாறுபாடுகள் உள்ளன. ஆனால், பெரும்பாலாக சைகை மொழி, சீராக ஒன்றுபோலவே இருக்கும்' என்கிறார் ரம்யா.

சர்வதேச சைகை மொழிகள் தினத்தில் காது கேளாதோருடன் தொடர்புகொள்வதற்கு இந்திய சைகை மொழியின் சில அடிப்படை மற்றும் முக்கியமான சைகைகளைதெரிந்துகொள்வோம். 

புன்சிரிப்பு (smile) 

இந்த சைகை பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். லேசான புன்முறுவலுடன் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் விரித்தவாறு மற்ற 3 விரல்களையும் மடக்கி தாடைக்கு அருகில் வைத்துக் காட்டுவது.

Story image

வருத்தம் / துயரம்/ மன்னிப்பு (Sorry) 

உங்கள் வலது கையை மார்புக்கு அருகே கொண்டுவந்து கடிகாரத் திசையில்(clockwise) சுற்றுவது. 

Story image

பாராட்டு / கைதட்டல் (Applause)

இரண்டு கைகளையும் மேலே தூக்கி திறந்த உள்ளங்கைகளை முன்னும்  பின்னும் திருப்புங்கள். 

Story image

நன்றாக இருக்கிறது / நன்று (Good) 

மீதமுள்ள விரல்களைத் திறந்து வைத்துக்கொண்டு உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை ஒன்றாக இணைத்து, அதை முன்னும் பின்னுமாக லேசாக நகர்த்துவது.

Story image

எக்ஸ்க்யூஸ் மீ (Excuse me)

மற்றவரது கவனத்தைப் பெறவேண்டுமெனில், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்வதற்கு உங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை இணைத்து முன்னோக்கி நீட்டிக் காட்டுவது. 

Story image

தயவுசெய்து (please)

உங்களுடைய வலது கையின் அனைத்து விரல்களையும் ஒன்றாகக் குவித்து சற்று முன்னே நகர்த்திக் காட்டுவது. 

Story image

நன்றி (thank you)

நன்றி சொல்ல, உங்கள் உள்ளங்கையைத் திறந்து விரல்களை தாடையின் அருகே வைத்து முன்னோக்கி நீட்டுவது. 

Story image

எல்லாம் நன்மைக்கே (All is well)

வலது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் விரித்தபடியும் இடது கையைத் தாழ்த்திக் கட்டை விரலை மட்டும் உயர்த்தியும் காட்டுவது, தொடர்ந்து, இரண்டாவதாக ஆள்காட்டி விரல்களை உயர்த்தியவாறு இரண்டு  கைகளையும் (thumbs up) மேல்நோக்கிக் காட்டுவது.

Story image

காலை வணக்கம் (Good morning)

வலதுகையில் ஆள்காட்டி விரலை மட்டும் மேலுயர்த்தி அதாவது 'தம்ப்ஸ் அப்'(thumbs up)செய்து, பின்னர் பூ விரிவதைப் போன்று கையைத் திறந்து காட்டுவது. 

Story image

நல்வரவு (Welcome)

வலதுகையை திறந்து வயிற்றுப் பகுதிக்கு அருகே கிடைமட்டமாக வைத்துக் காட்டுவது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.