பெரும் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கை அரசு, சீனாவின் கடனை அடைப்பதற்காக சீனாவிடமே மீண்டும் கடன் வாங்குகிறது.
சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் (நூறு கோடி) அமெரிக்க டாலர் கடனைப் பெறத் திட்டமிட்டுள்ள இலங்கை, இந்தத் தொகையை ஏற்கெனவே சீன வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: மகிந்த ராஜபட்ச அரசின் வீழ்ச்சி; நேரடி ரிப்போர்ட்-3
(ஒரு பில்லியன் டாலர் - நூறு கோடி டாலர், நடப்பு இந்திய மதிப்பில் 7,628 கோடி ரூபாய், இலங்கை மதிப்பில் 29,017 கோடி ரூபாய்).
சீனாவிடமிருந்து இலங்கை பெற்றுள்ள வங்கிக் கடன்களும் இதேயளவு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடன்களைத் திருப்பியளிப்பதற்கான தவணைகளை மாற்றியமைக்கும் திட்டங்கள் எதுவும் சீன நடைமுறைகளில் இல்லாததால் மறுகடன்கள் வாங்கப்படுவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க.. எரியும் இலங்கை: அழிக்கப்படுகிறதா இந்து கோயில்கள்? நேரடி ரிப்போர்ட் - 2
புதிய கடன்களை வழங்குவது தொடர்பான விதிகள் - நிபந்தனைகள் பற்றி இரு நாடுகளின் உயர் அலுவலர்களும் பேசி வருகின்றனர்.
இதனிடையே, சீனாவிடமிருந்து (சகலவிதமான) பொருள்களை இறக்குமதி செய்வதற்காக சீனாவிடமே 1.5 பில்லியன் (150 கோடி) டாலர் அளவுக்கு வர்த்தகக் கடன் வசதியைப் பெறவும் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க.. இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்