தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பீட்டாவுக்கு சமர்ப்பிக்க ஒரு வீடியோ ஆதாரம்: 

காளைக்கு அந்த வட்டார மக்கள் அளித்த இறுதி அஞ்சலி மரியாதைகளைக் கண்டு ஆச்சரியமாகவும் இருந்தது. மனிதர்களின் இறுதி அஞ்சலிக்கு நிகராக ஒரு மாட்டுக்கும் கெளரவமிக்க இறுதி மரியாதை கிடைக்கிறது.

News image
Updated On :16 ஜனவரி 2017, 12:01 pm

ஜல்லிக்கட்டு பற்றி யூ டியூப்பில் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்தது இந்த வீடியோ பதிவு. சில வருடங்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டில் கலக்கிக் கொண்டிருந்த ஒரு காளைமாட்டின் அபூர்வமான வாடிவாசல் ஜல்லிக்கட்டு காட்சிகளின் தொகுப்பு இந்த வீடியோ. காளைமாட்டின் பெயர் அப்பு. தொகுப்பின் இறுதியில் அந்த காளை தற்போது உயிருடன் இல்லை எனும் செய்தி வருத்தமளித்தாலும், காளைக்கு அந்த வட்டார மக்கள் அளித்த இறுதி அஞ்சலி மரியாதைகளைக் கண்டு ஆச்சரியமாகவும் இருந்தது. மனிதர்களின் இறுதி அஞ்சலிக்கு நிகராக ஒரு மாட்டுக்கும் கெளரவமிக்க இறுதி மரியாதை கிடைக்கிறது.

இப்படிப் பட்ட நெகிழ்வான மனம் கொண்ட ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களையும், மாடு பிடி வீரர்களையும் தான் பீட்டா அமைப்பு குறை கூறி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகும் முன்பு அவர்கள் ஏன் இது போன்ற வீடியோக்களையும் கூட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு பார்த்திருக்கக் கூடாது? ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென விரும்புபவர்கள் அதை உள்ளும், புறமுமாக ஆராய்ந்திருக்க வேண்டுமே! தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்றால் என்ன? அதை விரும்பும் மக்களின் அடிப்படை உணர்வுகள் என்ன? மக்கள் தங்களுடைய தன்மான உணர்வை, வீரத்தை, கொண்டாட்ட மனநிலையை, பாரம்பரியத்தை விடாமல் பின்பற்ற முயலும் விட்டுக்கொடுக்காத தன்மையை இத்தனையையும் உள்ளடக்கிய பேரன்பை இதையெல்லாம் ஆராயாமல் எப்படி ஒரு தலைபட்சமாக உச்சநீதிமன்றம் பீட்டாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது? என்று யோசிக்கும் போது மனவருத்தமே மிஞ்சுகிறது. 

Video courtsy: youtube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.