பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்!

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்!
Published on
Updated on
1 min read

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நாளை திறக்கப் படவிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 42 புதிய அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த போது; கடந்த வருடங்களைப் போல் இல்லாமல் அதிரடியாக மதிப்பெண் அடிப்படையிலான மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப் படக்கூடாது எனும் முடிவை எடுத்தது முதல் பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு மாற்றங்களைக்  கொண்டு வரும் முடிவில் இருக்கிறது தமிழக அரசு.

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com