புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ப.சிதம்பரம் மெர்சல் குறித்து டிவிட்டரில் என்ன கூறினார்?

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வைரல் ஆகி தேசியத் தலைவர்கள் பலரும் கருத்து

News image
Updated On :22 அக்டோபர் 2017, 10:13 am

DIN

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வைரல் ஆகி தேசியத் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். சமீபத்தில் மெர்சல் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். பதிலுக்கு பதில் என ப.சிதம்பரம் ரீ ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் மெர்சல் குறித்து கூறியது, 'அரசின் கொள்கைகளைப் பாராட்டி மட்டுமே இனி டாக்குமெண்டரி படங்கள்தான் எடுக்க முடியும். அதற்கென சட்டம் வந்தாலும் வரலாம்' எனப் பதிவிட்டிருந்தார்.  

அதற்குப் பதிலாக பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலடியாக ப.சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அப்படத்துக்கு பணம் கொடுத்தவர்கள் தான். அவ்வகையில் மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.