இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அந்நிய தேசங்களில் இந்தியாவின் நிலை குறித்த 9-ஆவது மாநாடு புதுதில்லியில் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர், வி.கே.சிங் ஆகியோர் திங்கள்கிழமை கலந்துகொண்டனர்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தற்போதைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும். இதில் இந்தியாவால் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
மேலும், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


