தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அக்கம் பக்கத்தில் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியதைப் பார்த்தால் இந்த நம்பருக்கு உடனடியாக புகார் செய்யுங்கள்!

நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :16 ஜூலை 2018, 5:13 am

DIN

நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகத்தின் அதிகாரி மேலும் கூறியதாவது:

கடந்த மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 60 முக்கிய ரயில் நிலையங்கள் உள்பட 435 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் மையங்கள் இருந்தன. தற்போது, 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களுக்கு அந்த மையங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் வரை 1.4 கோடி அழைப்புகள் இந்த மையங்களுக்கு வந்தன. ஏதாவது ஒரு பிரச்னையில் குழந்தைகள் சிக்கித் தவித்தால் அவா்களை 1098 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். குழந்தை கடத்தல் அதிக அளவில் நடக்கிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ள 76 ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

Story image

கடத்தப்பட்ட குழந்தைகளை ரயில்வே நிா்வாகம் மூலம் மீட்பதற்கு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ரயில்களிலும் குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவதை கண்டால் புகாா் தெரிவிக்குமாறு பயணிகளுக்கு உணா்த்தும் வகையில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.