திருமணமான 5 நாட்களில் கணவரது வீட்டில் வாழச் சென்ற புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெரு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தேறியிருக்கிறது.
திருமணமான உடனேயே மணமகன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் சேதுபதியும், அவரது புது மனைவி சிவசக்தியும் தங்களது மண வாழ்வைத் துவங்கினர். வீட்டின் கீழ் போர்ஷனில் சேதுபதியின் தாய், தந்தை வசித்தனர். இந்நிலையில் அலுவல் காரணமாக சேதுபதி நேற்று மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்த நிலையில் மாடியில் இருந்த சிவசக்தி நீண்ட நேரமாகியும் கீழ்தளத்தில் உள்ள மாமியார், மாமனாரைக் காண வராததாலும், மேல் தளம் அமைதியாக இருந்த காரணத்தாலும், மருமகளைக் காண மாடிக்குச் சென்றார் சேதுபதியின் தாயார்.
அப்போது மாடி அறையில் அவர் கண்ட காட்சியில் விக்கித்துப்போனார். அங்கே திருமணமாகி 5 நாட்களான நிலையில் புது மருமகள் தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தூக்கில் தொங்கியிருக்கிறார். இதைக் கண்டு அலறிய மாமியார் புஷ்பவள்ளி கதறி அழுது கொண்டு தன் கணவரிடம் ஓடியிருக்கிறார். இவரது அழுகைச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சிவசக்தியின் மரணம் குறித்து புகார் அளிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்தனர் போலீஸார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் சிவசக்தியின் மரணம் தற்கொலை தான் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. உண்மையைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் இப்படி ஒரு முடிவெடுத்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


