மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாங்கள் வெல்வோம், அலைகளைத் தாண்டிச் செல்லும் படகு.. துணிந்தவர்கள் இழக்க மாட்டார்கள்: ட்விட்டரில் சஞ்சய் ராவத்

திங்களன்று இங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு உள்ளான சஞ்சய் ராவத், பச்சனின் புகழ்பெற்ற கவிதையிலிருந்து இரண்டு வரிகளை ட்வீட் செய்தார்: அந்த வரிகள் இதோ..

News image

SANJAY RAUT SHIV SENA

Updated On :12 நவம்பர் 2019, 10:21 am

அகில இந்திய அளவில் மிகப் பெரிய கட்சியாக இருந்தபோதிலும், பாஜக மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தவறியதை அடுத்து மகாராஷ்டிராவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக உதவியின்றி ஆட்சிமைக்க இயலாத நிலையிலும், ஆட்சிக்கட்டிலில் ஏற வேண்டுமாயின் நிச்சயமாக மாற்றுக் கட்சியினரின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் சிவசேனை தனக்கான ஆதரவுகளைச் சேகரிக்கத் தவறியபோதும், அதன் தலைவரகளில் ஒருவரான சஞ்சய் ராவத், உடல்நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் (நடிகர்  அமிதாப் பச்சனின் தந்தை) சில வரிகளை மேற்கோள் காட்டி மகாராஷ்டிராவில் கட்சியின் வெற்றியை விட்டுவிடக்கூடாது எனத் தமது கட்சியினரை ஊக்கப்படுத்தி இருக்கிறார். 

திங்களன்று இங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்கு உள்ளான சஞ்சய் ராவத், பச்சனின் புகழ்பெற்ற கவிதையிலிருந்து இரண்டு வரிகளை ட்வீட் செய்தார்: அந்த வரிகள் இதோ..

“லெஹ்ரான் சே தர் கர் நெளகா பார் நஹி ஹோதி, ஹிம்மத் கர்னே வலோன் கி கபி ஹார் நஹி ஹோதி
ஹம் ஹொங்கே காமியாப், ஜரூர் ஹொங்கே” 

கவிதை வரிகளின் பொருள்.. அலைகளைத் தாண்டிச் செல்லும் படகு, துணிந்தவர்கள் இழக்க மாட்டார்கள், நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதே.. இந்த வரிகளைத்தான் சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டமன்ற வாக்கெடுப்பு முடிவுகளுக்குப் பிறகு பாஜகவுடன் அதிகாரத்தில் சமபங்கைக் கோருவதற்கான சிவசேனையின் குற்றச்சாட்டுக்கு தலைமை தாங்கிய 57 வயதான எழுச்சித் தலைவர் சஞ்சய் ராவத் திங்களன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முடிவை காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஒரு அரசாங்கத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளில் சிவசேனா திங்களன்று சற்றுப் பின்னடைவைச் சந்தித்தது.

சிவசேனை தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க இரு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்) “கொள்கையளவில்” ஒப்புக் கொண்டுள்ளன என்று சிவசேனை தலைவர் ஆதித்யா தாக்கரே கூறிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கூடுதல் உறுப்பினர்களைத் திரட்ட கூடுதல் நேரமளிக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர், மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். 

54 எம்.எல்.ஏ.க்களுடன், என்.சி.பி 288 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பாஜக (105) மற்றும் சிவசேனா (56) க்குப் பிறகு மூன்றாவது பெரிய கட்சியாகும், அங்கு 145 இல் பாதி குறி உள்ளது. காங்கிரசில் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கூட்டணியில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்பதால் , மகாராஷ்டிராவில் இன்னும் இழுபறி நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களாக பேசப்படும் சிவ சேனையின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு புகழ்பெற்ற கவிஞரின் வரிகளைக் கோடிட்டுக்காட்டி கட்சியையும், உறுப்பினர்களையும் ஊக்கப்படுத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Image Courtesy: Business Standard

Related Article

அயோத்தியில் ராமர் கோயில் வேண்டுமென இவர்கள் எல்லாம் போராடவில்லையே ஏன்?

4000 இளம்பெண்கள்.. 8 முன்னாள் அமைச்சர்கள்.. முன்னாள் முதல்வர் வரை நீளும் மகா 'ஹனி ட்ராப்' செக்ஸ் ஊழல்!

370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்!

‘ஸ்டாலின், வைகோ கெமிஸ்ட்ரி’ கேள்விக்கு வைகோவின் பதில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.