மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கறுப்புப் பட்டியலில் தப்லிகி ஜமாத்துக்கு வந்த 960 வெளிநாட்டினர், விசா ரத்து; சட்ட நடவடிக்கை!

தில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டவர்கள் 960 பேரைக் கறுப்புப் பட்டியலிட்டு, அவர்களுக்கு விசாக்களையும் மத்திய உள்துறை ரத்து செய்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2020, 4:51 pm

DIN

தில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டவர்கள் 960 பேரைக் கறுப்புப் பட்டியலிட்டு, அவர்களுக்கு விசாக்களையும் மத்திய உள்துறை ரத்து செய்துள்ளது.

மேலும் இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இவர்கள் அனைவரும் விசாவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை மீறி தப்லிகி ஜமாத் நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அயல்நாட்டவர் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு  தில்லி காவல்துறை மற்றும் மாநிலங்களின் காவல்துறைத் தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டரின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.