தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா இல்லா மாநிலம் கோவா: முதல்வர் அறிவிப்பு

கோவா மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் யாருமில்லை என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 1:48 pm

DIN

பனாஜி:  கோவா மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்கள் யாருமில்லை என்று மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

கோவாவை கரோனா இல்லா மாநிலம் என ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ள அவர், மாநிலத்தில் பரிசோதனை செய்யப்பட்ட ஏழாவது நபருக்கும் நோய்த் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவரப்படி புதிதாக கரோனா நோயாளிகள் யாருமே வரவில்லை. கடைசியாக இருந்த நபருடைய பரிசோதனை முடிவும் இன்று இல்லை என வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் கரோனா தொற்றுள்ளவர்கள் யாருமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

கரோனா இல்லா மாநிலம் என்ற தகுதி நிலை தொடர, மக்கள் தொடர்ந்து, அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சாவந்த் கேட்டுக்கொண்டார்.

கரோனாவால் பாதிக்கப்படாத பகுதி கோவா என மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும், தற்போதைய நிலையை நாங்கள் மத்திய அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம் என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.