டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதிய கல்விக்கொள்கை: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு

புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு அம்சமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை போன்று காலை உணவு வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலை உணவின்றி வரும் மாணவர்களால் கல்வியில் நாட்டம் செலுத்த இயலாது என்பதற்காக பள்ளிகளிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது.

காலை உணவின் மூலம் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும் என்பதாலும், அதன் மூலம் பாடங்களில் மாணவர்கள் கவனம் செலுத்த ஏதுவாக அமையும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஒரு சில இடங்களில் சூடான காலை உணவு வழங்க இயலாத சூழல் ஏற்படும் என்பதால், அப்பகுதிகளில் நிலக்கடலை, வெல்லம் அல்லது பழங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தின்கீழ் 59 கோடி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 26 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.