மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்பப் பிரச்னை: காவல் நிலையத்தில் சின்னத்திரை நடிகை புகார்

குடும்ப பிரச்சனையினை தீர்கக்கூறி, எடப்பாடி காவல் நிலையத்தில், நேற்று சின்னதிரை நடிகை புகார் அளித்துள்ளார்.  

News image
Updated On :2 ஆகஸ்ட் 2020, 3:01 pm

DIN


எடப்பாடி: குடும்பப் பிரச்னையினை தீர்க்கக் கோரி, எடப்பாடி காவல் நிலையத்தில், சின்னத்திரை நடிகை நேற்று (சனிக்கிழமை) புகார் அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிலா(32). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கணவர் ஈஸ்வரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஷிலா, நடிப்பு தொடர்பான நுணுக்கங்களை கற்க, மும்பைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த, கட்டிட கலைஞரான, சௌந்திர ராஜன் என்பவருடன் ஷிலாவிற்கு, முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வள்ளியூரில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து, ஷிலாவை சௌந்திர ராஜன் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்த சில ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த சௌந்திரராஜன் ஷிலாவைப் பிரிந்து, தனது சொந்த ஊரான எடப்பாடி பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் ஷிலா உடனான தொடர்பினை படிப்படியாக துண்டித்த சௌந்திரராஜனுக்கு, அவரது பெற்றோர் வேறு திருமணம் செய்து வைக்க உள்ளதாகத் தகவல் அறிந்த ஷிலா, நேற்று எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் சௌந்திரராஜன் வேறுபெண்னை திருமணம் செய்வதனை தடுத்து நிறுத்தி, தன்னுடன் வாழ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார்.

இது குறித்து சௌந்திரராஜனிடம் தொடர் விசாரனை மேற்கொண்டபோது, ஷிலா ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், மேலும் ஷிலாவிற்கு முதற்கணவருடன் விவாகரத்து ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து எடப்பாடி காவல் துறையினர், இப்பிரச்னையினை இருவரும் சம்பந்தப்பட்ட குடும்பநல நீதிமன்றத்தினை அணுகி தீர்வுகாணுமாறும் கூறி அனுப்பிவைத்தனர்.

ஷிலா தற்போது தொலைக்காட்சியில் வரும் பல்வேறு தொடர் நாடகங்களில், நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.