பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆகஸ்ட் 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
பலுசிஸ்தான் மாகாணத்தில் கரோனா அச்சுறுத்தல் குறையாததால் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் கரோனா அச்சுறுத்தல் குறையாததால் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பலுசிஸ்தான் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
எனினும் கரோனா பரவலின் தாக்கம் குறையாததால், தற்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பொது இடங்களில் 10 நபர்களுக்கு மேலும் கூடுவதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 நபர்களுக்கு மேல் கார்களில் பயணம் செய்யக் கூடாது. மனைவி மற்றும் குழந்தைகளை மூன்றாவது நபர்களாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ள நிலையில், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானில் 11,774 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக அங்கு கரோனா உயிரிழப்பு நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...