தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

கரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2020, 8:47 pm IST

அம்பாசமுத்திரம்: கரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மூலக் கோயிலாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் குலதெய்வ வழிபாடான பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களும் சொரிமுத்து அய்யனாரை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருவர். ஆடி அமாவாசைக்கு திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். 

இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பிற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அனைத்துக் கோயில்களும் மூடபட்ட நிலையில், பங்குனி உத்தரம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. தற்போது பொதுமுடக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஜூலை 20இல் நடைபெற வேண்டிய ஆடி அமாவாசை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு 11 நாள்களுக்கு முன் கால்நாட்டப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் தங்கியிருந்து விரதமிருந்து வரும் நிலையில் ஜூலை 10 வெள்ளிக்கிழமை கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெறவில்லை. மேலும் ஆடி அமாவாசை நிகழ்ச்சியின் 9ஆம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக சிங்கம்பட்டி ஜமீனின் ராஜ அலங்கார தரிசனம் நடைபெறுவதுண்டு. இந்நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். தீர்த்தபதி மே 25இல் காலமானதையடுத்து வரும் ஆண்டுகளில் ராஜ அலங்கார தரிசன நிகழ்ச்சி நடைபெறுமா என்று பக்தர்கள் ஐயத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.