ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தில்லியில் திணறுகிறது நிகாம்போத் மயானம் - கரோனாவால் அதிகரித்த சடலங்களின் வருகை!

கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியிலுள்ள மயானம்  இறந்தோரின் உடல்களை எரியூட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :6 ஜூன் 2020, 12:19 pm

DIN

கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியிலுள்ள மயானம்  இறந்தோரின் உடல்களை எரியூட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

கரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்ந்துவிட்ட நிலையில்,  உயிரிழப்பும் 6649 ஆக அதிகரித்துள்ளது.

Story image

தில்லியில் யமுனை ஆற்றங்கரையிலுள்ள நிகாம்போத் படித்துறை மயானத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களைக் கையாளத் தகுந்த நபர்கள் இல்லாததால் உடல்களை எரியூட்ட நேரமாகிறது.

இதனால், இந்த மயானத்தின் வாசலில் இறந்தோரின் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகின்றன. சடலங்களை மயானத்துக்கு எடுத்துவரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தர நேரிடுகிறது.

Story image

ஒவ்வொரு சடலமும் எடுத்துவரப்பட்டவுடன் டோக்கன் எண்கள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஏற்கெனவே வந்துள்ள சடலங்கள் எரியூட்டிய பின், அழைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

சில நேரங்களில் 5 மணி நேரத்துக்கும் மேலாகக்கூட காத்திருக்க நேரிடுகிறது.

Story image

கடந்த வாரத்தில் ஒரு நாள், இந்த மயானத்தில் மின்சாரம் மூலம் எரியூட்டும் சாதனம் பழுதாகிவிட்டதால் 8 சடலங்களை மீண்டும் மருத்துவமனைகளுக்கே அனுப்ப நேரிட்டிருக்கிறது.

Story image

இதைத் தொடர்ந்து, வழக்கமான முறையில் மரக் கட்டைகளை வைத்து சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. ஒரு நாளில் சுமார் 20-க்கும் அதிகமான சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

Story image

இறந்த பிறகும்கூட நிம்மதியாகச் சென்றடைய முடியாத நிலைமையேற்பட்டிருக்கிறது இப்போது தில்லியிலும் கரோனாவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.