இந்த நிலையில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றதால் கிராம மக்கள் இதனை நிறுத்தக் கோரி மீண்டும் புதன்கிழமை மதியம் செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் என். சாத்தையா, ஏஐடியுசி துப்புரவுத் தொழிலாளர் சங்க மாநில உதவிச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் மற்றும் கானாடுகாத்தான், பள்ளத்தூர், கொத்தரி, கொத்தமங்கலம், தேத்தாம்பட்டி, சந்தைப் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 300 பேர் வரை இந்த முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.