நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லண்டனில் காவல்நிலையம் மீது கார் மோதியது: விபத்தா, தாக்குதலா?

லண்டனில் காவல் நிலையத்தின் மீது ஒரு கார் மோதியதாக பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image

லண்டனில் காவல்நிலையம் மீது கார் மோதியது

Updated On :12 நவம்பர் 2020, 2:02 pm

DIN

லண்டனில் காவல் நிலையத்தின் மீது ஒரு கார் மோதியதாக பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் புதன்கிழமை மாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது விபத்தா, திட்டமிட்ட தாக்குதலா என்பது பற்றிக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் ஒருவரும் காயமடையவில்லை.

கட்டடத்தின் மீது கார் மோதியதைத் தொடர்ந்து, எட்மண்ட்டன் காவல்நிலையம் காலி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்துக்குக் காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாகனத்தை சிறப்பு அலுவலர்கள் சோதனை செய்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்துவரும் நிலையில், இந்தக் காவல்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மக்கள் புழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.