எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்னையில் நூலக வார விழா புத்தகக் கண்காட்சி

தேசிய புத்தகத் திருவிழா - நூலக வாரவிழாவையொட்டி,  டி.எம்.எஸ். வளாகத்தில் புத்தக விற்பனைக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது.

News image

நூலக வார விழா புத்தகக் கண்காட்சி

Updated On :19 நவம்பர் 2020, 2:54 pm IST

சென்னையில் மாநில பொது சுகாதார நூலகமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து  நடத்தும் தேசிய புத்தகத் திருவிழா - நூலக வாரவிழாவையொட்டி,  டி.எம்.எஸ். வளாகத்தில் புத்தக விற்பனைக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது.

புத்தகக் காட்சியைப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் தி.சி. செல்வ விநாயகம் தொடக்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.

திறப்புவிழாவில் அரசு உயர் அலுவலர்களும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பொது மேலாளர் தி. ரத்தினசபாபதி, மண்டல மேலாளர் எஸ்.மணவாளன், கிளை மேலாளர் சா.குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

"மக்களிடையே வாசிக்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி, பல்வேறு வகையிலும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும்.

"இதன் மூலம் டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள அனைத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், எழுத்தர்கள், பணியாளர்கள் மிகவும் பயனடைவார்கள். அருகிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோரும் பயன்பெறுவார்கள்.

"பல ஆயிரக்கணக்கான நூல்கள் இடம்பெற்றுள்ள  இந்தப் புத்தகக் கண்காட்சி, காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கும்.  வாங்கும் நூல்களுக்கு விலையில் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.  நூலகங்களுக்குக் கூடுதலாகத் தள்ளுபடி  வழங்கப்படும்.

"இந்தக்  கண்காட்சி நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும்" என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.