மதுரை அருகே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக்கொலை
மதுரை அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.


மதுரை அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் (50) மற்றும் முனுசாமி (40) ஆகிய இருவரும் இந்தப் பகுதியில் மலையடிவாரத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
இவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களைக் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் முனுசாமி இருவரையும் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கருப்பாயூரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...