மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

புலம்பெயர் தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பிறந்த 21 குழந்தைகள்!

கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

மமதாவின் குழந்தையுடன் ரயிலிலிருந்து இறங்குகிறார் மருத்துவப் பணியாளர்

Published On :

கரோனா பொது முடக்கம் நடைமுறையிலுள்ள காலத்தில், மே மாதம் முதல் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இதுவரை 21 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர்.

குஜராத்தில் ஜாம்நகரில் நிறைமாத கர்ப்பிணியாக ரயிலேறிய மமதா, பிகாரில் சப்ரா ரயில் நிலையத்தில் இறங்கும்போது கையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையுடன் இறங்கினார்.

ரயில் பெட்டியே மகப்பேறு அறையாக மாற்றப்பட்டுக் குழந்தையும் பெற்றெடுத்தார் மமதா. இந்த தாய் மற்றும் குழந்தைக்கான மருத்துவ கவனிப்புக்காக,  இடைநில்லா இந்த சிறப்பு ரயில், ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பின்னர், அதே ரயிலிலேயே மமதா அவருடைய ஊரைச் சென்றடைந்தார்.

மே முதல் நாளிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களில் சுமார் 21 குழந்தைகள் பிறந்திருப்பதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

கெடுவினையாக வெவ்வேறு ரயில்களில் இரு குழந்தைகள் மட்டும் இறந்தே பிறந்தன, மற்றொரு பெண் குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.