மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டத்திற்கு ரூ.257.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* மேலும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.741.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

* தமிழக சுகாதார சீரமைப்புத் திட்டத்திற்காக ரூ.116.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046.09 கோடி நிதி ஒதுக்கீடு.

* 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1.303 ஆக அதிகரிக்கப்படும்.

* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு.

* மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 13 மாதங்களாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com