நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டை விற்பதற்கானது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல, நாட்டை விற்பதற்கானது. ஏற்கனவே ரயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவை விற்றனர். இந்த பட்ஜேட் மூலம் எரிவாயு நிறுவனம், சாலைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.