மேக்கேதாட்டு அணை: புதுச்சேரியில் காவிரி மீட்புக் குழுவினர் போராட்டம்

மேக்கேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து காவிரி மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காவிரி மீட்புக் குழுவினர் போராட்டம்
புதுச்சேரியில் காவிரி மீட்புக் குழுவினர் போராட்டம்

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைகட்ட முயற்சிக்கும் அம்மாநில அரசைக் கண்டித்து, காவிரி மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அண்ணாசிலை அருகே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து, தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்தும், அணை கட்ட அனுமதி இல்லை என மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கக் கோரியும், கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை வித்திக்க வேண்டும் எனக் கோரி, புதுச்சேரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர், அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது போராட்டக்குழுவினர், திடீரென  எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து, எடியூரப்பாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com