சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மேக்கேதாட்டில் அணைக் கட்டும் முயற்சி: தஞ்சாவூரில் உண்ணாவிரதம்

மேக்கேதாட்டில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

News image
தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள்.
Updated On :15 ஜூலை 2021, 7:20 am

DIN


தஞ்சாவூர்: மேக்கேதாட்டில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மேக்கேதாட்டில் அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. ராசிமணலில் அணைக் கட்டத் தமிழகத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

குறுவை பயிரைக் காப்பாற்ற, சம்பா சாகுபடியைத் தொடங்க உரிய தண்ணீரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அணைகளின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.

சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.  பாண்டியன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.