திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,542 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,424 ஆக உள்ளது. இதுவரை 948 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,170 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,878 படுக்கைகள், அவசரப் பிரிவில் 374 படுக்கைகள், 1,231 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,483 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.