தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு நகர பேருந்துகள் இயக்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார். 

News image
திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு நகரப் பேருந்து சேவையை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
Updated On :31 ஜூலை 2021, 5:35 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதிய வழித்தடங்களில் அரசு நகர பேருந்துகள் இயக்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார். 

திருப்புவனத்தில் இருந்து மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், கழுவன்குளம், மிளகனூர், கீழச்சொரிக்குளம், பிரமனூர், சிவகங்கை- மானாமதுரை வழியாக காளையார்கோயில்  என ஏழு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது. 

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் கலந்துகொண்டு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் போக்குவரத்து துறை மிகவும் சீர்கெட்டு ரூ 33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு நாளொன்றுக்கு 13 ஆயிரம் பேருந்துகள் வரை மட்டுமே தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் போக்குவரத்து துறை சீர்செய்யப்பட்டு தினமும் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு விரைவில் தினமும் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் தேவையான பேருந்து வசதிகள் செய்து தரப்படும். தமிழகத்தில் பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு ரூ.1358 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். 

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி போக்குவரத்துக்கழக அதிகாரிகள், திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.