இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி
Updated On :11 ஜூன் 2021, 1:24 pm

DIN

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க நீட்டிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையின் படி மேலும் ஒரு வார காலத்திற்கு பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாக தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பில் 11 மாவட்டங்கள் நீங்கலாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.