பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வயதுவந்தோரில் 5% பேருக்கே இதுவரை தடுப்பூசி!

நாட்டில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கி 5 மாதங்களானபோதிலும் இதுவரை  வயதுவந்தோரில் சுமார் 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
நாட்டில் இதுவரை  வயதுவந்தோரில் சுமார் 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
Updated On :19 ஜூன் 2021, 5:30 am

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கி 5 மாதங்களானபோதிலும் இதுவரை  வயதுவந்தோரில் சுமார் 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை நாட்டில் 5.03 கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் வயது  வந்தோரின் எண்ணிக்கை 94 கோடிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு தவணை மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 27.07 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது நாட்டின் வயது வந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சுமார் நான்கில் ஒரு பங்கு.

உலகளவில் மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் ஏறத்தாழ 80 நாடுகள், இந்தியாவைவிட முன்னிலையில் இருக்கின்றன.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளில் 30.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஜூன் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவது கவலையளிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி அளவு, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட மே மாதத்தில் 40 சதவிகிதம் குறைவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனோ நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.