புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வட மாநிலங்களில் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

News image
Updated On :20 ஜூன் 2021, 1:58 pm

DIN


வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மெதுவாக முன்னேறி வருவதால் நீடித்த மழைக்கு வாய்ப்பில்லை.

மேலும் தென்கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.  

மேற்கு பகுதி காற்றின் தாக்கம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.